Saturday, August 9, 2014

பங்கு வர்த்தகம் - முன்னுரை

 

நண்பர்களே Whatsapp, Twitter, Facebook போன்ற பல சமூக பிணைய முறைகள் பிரபலமாகி இருக்கும் இந்த காலத்தில் அனைவரும் பல நல்ல அறிவுரைகளை தினமும் பகிர்ந்துக் கொள்கிறோம்.

பலரும் வாழ்கை வாழ்வதற்கே, தினமும் நன்கொடை வழங்குங்கள், ஏழைகளை காப்பாற்றுங்கள், அநாதைகளக்கு உதவுங்கள் என்று அறிவுரைகளை பிறருக்கு forward செய்கிறார்கள். இது நல்ல விடயம் தான். மறுப்பதற்கில்லை. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் என்றோ தனக்கு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கிறது என்றோ யாரும் சொல்லிக் கொள்வதில்லை. அவ்வாறு யாராவது சொன்னால் சமூகத்தில் அவர்களை தவறாக எண்ணி விடுவார்களோ என்று நினைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது.

முதல் மந்திரம்

அதிக பணம் சம்பாதிக்க விரும்பவதோ நல்ல வாழ்கை வாழ வேண்டும் என்று நினைப்பதோ பாவம் இல்லை. நேர்மையான எந்த வழியில் நீங்கள் பணம் சம்பாதித்தாலும் அதைக் கொண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கு நல்ல வாழ்கை அமைத்துக் கொடுக்க நினைப்பதும் எந்த தவறும் இல்லை. அதனால் இந்த ஆசை உள்ளவர்கள் குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டாம்.

அவ்வாறாக அறிவுரை அனுப்பும் பல நல்ல உள்ளங்கள் பயன்படுத்தும் WhatsApp திறன் கொண்ட கைப்பேசிகள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல். ஒரு ஏழை குடும்பத்தின் வருடாந்திர வருமானம். ஏன் இவர்கள் இந்த கைப்பேசியின் செலவை அவர்களுக்கு அளித்திருக்கக் கூடாது? ஆகையால் இந்த போலியானவர்களை நம்ப வேண்டும்.

நிறைய சம்பாதிக்கவும். அதைக் கொண்டு உங்கள் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும். எஞ்சியவை தான தர்மம் செய்யவும். இன்று தான தர்மங்கள் செய்துவிட்டு நாளை உங்கள் சந்ததி நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்தாலும் நீங்கள் தான் அதற்கு பொறுப்பாவீர்கள்.

எந்தெந்த வகைகளில் முதலீடு செய்யலாம்:

  • நிலம்
  • வீடு
  • தங்கம்
  • வெள்ளி
  • வங்கி சேமிப்பு

மேலும் பேசுவோம்….

No comments:

Post a Comment